வியாழன், 29 டிசம்பர், 2011

நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும்



நயவஞ்சகர்களின் குணங்களும் தண்டனைகளும்


இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிப்பதையும், பழகிக் கெடுக்கும் சூழ்ச்சியையும் செய்பவரை நயவஞ்சகன் என்கிறோம். அரபி மொழியில் இந்த தீய செயல்கள் உள்ளவர்களை முனாஃபிக் என்று கூறுவர். இவர்கள் வெளித்தோற்றத்தில் முஸ்லிம்களைப் போன்று நடித்துக் கொண்டு, அந்தரங்கத்தில் மறுப்பாளனாக வாழ்பவர்கள்.

சனி, 17 டிசம்பர், 2011

மாபெரும் அடையாளங்கள்


மகளின் தயவில் தாய்

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777, 50

புதன், 14 டிசம்பர், 2011

சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கி வேதாளத்தைத் தூக்கி இன்னோவாவில் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய, ""நண்பா, ஒரு நல்ல டீ சாப்பிடணும்; வண்டிய நேரா "சீ மெரிடியன்' ஓட்டலுக்கு ஓட்டு, அங்க வெச்சு உனக்கு ஒரு கதை சொல்றேன்''என்றது வேதாளம். விக்கியின் இன்னோவா "சீ மெரிடியனை' நோக்கிச் சீறியது.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?


ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்

` அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ''என்றார்.

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

அம்மார் பின் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு



தாயார் பெயர் சுமைய்யா ரளியல்லாஹு அன்ஹா தந்தை பெயர் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு.

யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார் ரளியல்லாஹு அன்ஹு.

வியாழன், 8 டிசம்பர், 2011

"நேரமில்லை" – ஓர் இஸ்லாமியப் பார்வை!






நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!

புதன், 7 டிசம்பர், 2011

நலிவை ஏற்படுத்தும் நகைக்கடன்!



தமிழகத்தில் அண்மைக்காலமாக புற்றீசல்கள் போல தனியார் நிதி நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. இதில் முன்னணியில் இருப்பவை நகைக்கடன் வழங்கும் நிறுவனங்கள்தான். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தைக் குறி வைத்து இந்நிறுவனங்கள் களம் இறங்குகின்றன. காரணம், தமிழக மக்கள் கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதாலோ என்னவோ?.
குறிப்பாக, நகைக்கடன் என்ற பெயரில் ஏழைகளையும், வறுமையில் வாடுபவர்களையும் இந்நிறுவனங்கள் பிழிந்து எடுத்து விடுகின்றன. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத கேரளத்தைச் சேர்ந்தவர்கள்தான் நகைக்கடனில் முதலிடத்தில் உள்ளனர்.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பெருமை மிக்கவை என்ற பீடிகையுடன் இந்த வியாபாரத்தில் தந்திரமாக சில நிதி நிறுவனங்கள் கொடி நாட்டியுள்ளன. பெரும்பாலும் இந்த வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் ஒன்றும் சிரமமே கிடையாது. காரணம், அத்தனை விரைவாக கைமேல் காசு. போதாக்குறைக்கு தமிழக நடிகர்களின் விளம்பர படங்களும் இந்த வங்கிகளுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளன.
தமிழர்களுக்கு தண்ணீர் தரமுடியாது என்ற எதிரான போக்கை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது கேரளம். ஆனால், அம் மாநிலத்தவரின் மொத்த வர்த்தகம் தமிழகத்தை நம்பியே உள்ளது. ஏன், நம் மாநிலத்தில் இச்சேவைக்கு ஆளே கிடையாதா? அல்லது மக்கள் மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்விதான் எழுகிறது. கந்துவட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்ற பெயரில் ஏற்கெனவே இங்கு தனியாக வட்டி வழங்கும் வியாபாரம் நடந்து வருவது
தனிக்கதை.
இந்நிலையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி குறைந்தபட்சம் ஒரு சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை தங்க நகைகளின் பெயரில் பணம் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனங்களின் பின்னணி, பாதுகாப்பு போன்றவற்றை யாரும் கவனத்தில் கொள்வாரில்லை.
இதற்கு உதாரணம், அண்மையில் கரூரில் நடைபெற்ற பெரும் கொள்ளை. போலீஸôரின் கடும் நடவடிக்கைக்குப் பிறகு கொள்ளையர்கள் பிடிபட்டனர். கடைசியில் நகைகளை இழந்தவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. உண்மையில் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் இதுபோன்ற நிதி நிறுவனங்கள் ஒரு சிறிய அறையில் நடத்தப்படுகின்றன.
மேலும் ஏராளமான நகைகள் இங்கு பெறப்பட்டு பணம் வழங்கப்படுகிறது. சுலபமான நடைமுறை இருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம், நம்மூர் வங்கிகளின் சோம்பேறித்தனமும், பொறுப்பற்ற தன்மையும்தான். ஒரு விவசாயி அல்லது நடுத்தர நபர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் நகைகளை அடகு வைக்கச் சென்றால் அங்கு கேட்கப்படும் ஆவணங்கள், சான்றுகள் இதர விவரங்களைக் கேட்டதும் மயக்கம்போட்டு விழாத குறையாகப் பலர் ஓடிவந்து விடுகின்றனர்.
மதிப்புமிக்க நகையை வைத்துப் பணம் பெற இத்தனை விதிமுறைகள் தேவையா என்பதே பலரின் கேள்வி. வெறுமனே சான்றிதழ்களை வைத்து பணம் கேட்டால்தான் வங்கிகள் யோசிக்க வேண்டும். ஆனால் வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். மற்றொருவர் அறிமுகம், தரம்பரிசோதனை செய்பவருக்கு கட்டணம் அப்படி, இப்படி என்று கிட்டத்தட்ட அரைநாள் முழுவதும் நகையையும் கொடுத்துவிட்டு பணத்துக்குக் காத்துக்கிடக்க வேண்டும். அத்துடன் வட்டி விகிதம் குறைவு என்றாலும், கிடைக்கும் தொகையும் குறைவு என்பதால், பலரும் தனியார் நிதி நிறுவனங்களை நாட வேண்டிய நிலை உள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கியாகட்டும், கூட்டுறவு வங்கிகளாகட்டும் விதிமுறைகளில் தளர்வு, விரைவு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நகைக்கு, பாதுகாப்பு என்பதால்தான் மக்கள் வங்கிகளை நாடி வருகிறார்கள். எனவே, அதை முறையாகச் செயல்படுத்த வங்கி நிர்வாகங்கள் முன்வருவதுடன், மக்களைக் காத தொலைவுக்கு ஓட வைக்கக் கூடாது.
எனவே, தனியார் நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள், குறைந்த வட்டி போன்ற நிபந்தனைகளை விதித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு வங்கிகளில் மக்கள் சுலபமாக நகைக்கடன் பெற வழி செய்ய வேண்டும்.
இல்லையேல் நகைக்கடனால் நாளுக்குநாள் மக்கள் நலிவடைய நேரிடும்.


செவ்வாய், 6 டிசம்பர், 2011

பொக்கிஷங்கள் 32



1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

நபிகளின் உள மருத்துவம்



இன்றைய உலகில் உளமருத்துவம் மிகப்பெரும் இடத்தைப் பிடித்துள்ளது. உடல் உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோயாளிகள் உளநோயாளிகள் என்று நோயாளர்கள் இரு பெரும் வகைப்பாட்டுக்குள் இன்று அடக்கப்படுகின்றனர்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

சீர்திருத்தம் என்பது எதுவரை?



விலங்குகளோடு சுவர்கத்துக்குள் நுழைபவர்கள்!
தினமும் சுபுஹ் தொழுகைக்குப்பிறகு ஒரு நபி மொழியை சொல்லி, அது பற்றி மட்டுமே உள்ள கருத்துக்களை ஒரு சொற்பொழிவு போல் இல்லாமல் சாதாரண பாணியல், 5 லிருந்து 7 நிமிடங்களுக்குள்ளாக சொல்லி முடித்து விடுவது நமது பள்ளிவாசலில் வழக்கம். நேற்றைய தினம் ஒரு நபிமொழியை வாசித்தேன். அதன் பொருளை கேட்டவுடன் தொழுகையாளிகளின் முகத்தில் ஒரு ஆச்சரியக் கேள்விக் குறி படர்ந்தது. அது படர்கிறதா என்பதை நான் கவனித்து காத்திருந்தேன். அப்படியே நடந்தது.

வெள்ளி, 2 டிசம்பர், 2011

தூக்கம் ஏன்-எதற்கு-எப்படி?



தூக்கம் மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமே அவனை எப்போதும் விழிப்புடையவனாக இருக்கச் செய்யும். குறைந்த நேரம்  தூங்கி அதிகம் உழைப்பவர்கள் பலர் உள்ளனர்.  ஆனால் இவர்கள் குறைந்த நேரத்தில் நல்ல தூக்கம் பெறுவதால் தான் இவர்களால் நன்கு உழைக்க முடிகிறது.
அளவான தூக்கம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

வியாழன், 1 டிசம்பர், 2011

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!



ஒரு  வாலிபன் ஒரு பெண்னை  திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்பின்னர் திருமணத்துக்காக    தயாராகின்றான்அப்போது     அவனது சகோதரன்  அப்பெண்னை  திருமணம்  முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான்.  அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை  கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்;