ஞாயிறு, 31 ஜூலை, 2011

காலம் மனிதனிடம் ஒரு கேள்வி கேட்டது!




காலம் மனிதனிடம் ஒரு கேள்வி கேட்டது! நீ விரும்புவது விடுதலையையா... ஜெயிலையா?’ என்று! விடுதலையைத்தான் விரும்புகிறேன்என்று மனிதன் சொன்னான்.
அவனிடமே மரணத்தைக் கண்டு அஞ்சுவாயா?’ என்றது காலம். ஆமாம்என்று பதிலளித்தான் மனிதன்.
பந்த சிறைக்குள் சிக்கிக் கிடக்கும் உங்களுக்கு முதுமையை தந்து வாழ்க்கையில் முற்றுபெறும் விடுதலையை அளிக்கிறேன். ஆனால் அதற்கு மரணம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு அழுது புரள்கிறீர்களே.! ஏன்?’ என்று கேட்டது காலம்.
மனிதன் பதிலளிக்காமல் தலை குனிந்து நின்றான்!
பறவைபோல் ஆனந்தமாக பறந்து திரியும் ஆன்மா பந்த சிறைக்குள் சிக்கி தாய் வயிற்றில் குழந்தையாகிறது. தாய் வயிற்று குழந்தைக்கு முதல் சிறை அது நிறைவாகும் போது திறந்த வெளி ஜெயிலான இந்த பூ உலகுக்குள் பிரவேசம். உண்மையில் இந்த உலக வாழ்க்கை மிக மிக குறுகலான நெருக்கடியான பந்தச் சிறை. பிறக்கும் குழந்தையானது இருவருக்கு மகன், சிலருக்கு தம்பி, அடுத்தவர்களுக்கு மருமகன்மாமாசித்தப்பா…! அவர்கள் ஒவ்வொருவரும் உறவு முறை என்றதொரு கம்பிக் கூண்டோடுதான் அவனை நெருக்குகிறார்கள். சில கூண்டு ஜெயில்கள் அவனை அடைக் கின்றன. சிலவற்றுக்குள் அவனே போய் அடைபட்டுக்கொள்கிறான். வளரும் போது உறவுக் கூண்டுகள் அவனை பலவாறு இறுக்கிக்கொள்கின்றன. பந்தச் சங்கிலிகள் பலவாறு அவனை முறுக்கிக்கொள்கின்றன.
அவைகள் மட்டுமா...?
பெண்ணின் அன்பில் விசாரணைக் கைதியாக இருந்து காதல் சிறைக்குள் சிக்குகிறான். இன்னொரு குடும்பத்தால் துப்பறிந்து விசாரிக்கப்பட்டு கல்யாண ஆயுள் சிறைக்குள் விரும்பிப் போகிறான். சில இடங்களில் பாசமிரட்டலோடு உள்ளே தள்ளப்படுகிறான். பெரும்பாலான பந்த சிறைகளுக்குள் காற்று புகுவதில்லை. வெளிச்சமும் இல்லை. இருட்டு, கும்மிருட்டு, மனப் புழுக்கம்.
மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ காலம் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது. எந்த கவலையும் இன்றி ஆடிப்பாடி ஆனந்தமாய் வளர சிறு வயது பருவம் கிடைத்தது. ஆனால் இளமைப் பருவத்தில் நின்றுகொண்டு கடந்து போன சிறு வயதை நினைத்து ஏங்குகிறார்கள். முதுமை வந்த பின்பு அனுபவிக்க மறந்து போன இளமையை நினைத்து இயலாமை பெருமூச்சு விடுகிறார்கள். மரணம் வரும்போது அதை ஏற்றுக் கொள்ளவோ பந்தச் சிறையில் இருந்து விலகிப் போகவோ மனமின்றி தான் இன்னும் சில காலம் முதுமையுடனாவது வாழலாமேஎன்று நினைக்கின்றார்கள். மரணம் தேடினாலும் வரப்போவதில்லை. விலகினாலும் தள்ளிப்போவதில்லை!
முதலில் கேள்வி கேட்ட காலம் இப்போது கை நீட்டிக் காட்டியது சமீபத்தில் திருமணமான ஒரு வீட்டை. அங்கு கணவன்- மனைவி- மாமியார் என மூவர். பெண்களான இருவருக்குள்ளும் ஓயாத மாமியார் மருமகன் சண்டை.காலம் சொன்னது வயதில் மூத்த பெண்களுக்கு விலகிக்கொள்ளும் பக்குவம் வரவே இல்லை’ 25 வயதுவரை நான் என் மகனை வளர்த்தேன் கவனித்தேன்.
அப்பாடா இப்போது அவனுக்கு ஒரு மனைவி கிடைத்துவிட்டாள். இனி அவனை அவள் பார்த்துக்கொள்வாள். எனக்கு இனி கவலையில்லை. நல்ல ஓய்வுஎன்று அந்த சுமையை மருமகள் தோளில் ஏற்றிவிட்டு ஒதுங்கிக்கொள்ளாமல் ஏன் அப்படி நடஇப்படிச் செய்என்று சிறை கண்காணிப்பாளர் போல் நடந்து கொள்கிறார்கள்.மகன் தன் மூலமாகப் பிறந்ததால் தான் மரணமடையும் வரை அவனுக்கு விடுதலை கொடுக்கமாட்டேன் என்றால் எப்படி?’ கேட்டது காலம். பதிலுக்கு திகைத்து நின்றான். மனிதன்.
விலகுதல் என்பது பேராண்மை. அந்தந்த பருவத்திற்கு வரும்போது அந்தந்த பொறுப்பிற்கு வரும் போது சிலவற்றில் இருந்து விலகும் மனம் வேண்டும். வயதாகும் பேது உணவில், உணர்வில், எண்ணங்களில், நடத்தையில் விலகுதல் ஏற்பட்டால் 75 சதவீத பக்குவம் வந்துவிடும். விலகிப்பாருங்கள் பிரச்சினைகள் உங்களிடமிருந்து முற்றிலுமாக விலகிப் போய்விடும். சிலருடனான உறவுகளில், சில ஆசைகளில், சில பந்தங்களில் இருந்து விலக முடியாததால் பலர் எத்தனை இழ்புகளை சந்திக்கிறார்கள்!
விலகுவது என்பது சரி. ஆனால் ஒரு சில பந்தங்களில இருந்து விலகவே முடியாதே!என்ற ஒரு கேள்வி எழுவது இயல்புதான். சிலவற்றிற்கு விதிவிலக்கு எல்லா விஷயத்திலும் உண்டு.ஒரு பெண் சொன்னாள். என் கணவர் எனக்கு செய்யக்கூடாத கொடுமையை செய்துவிட்டார். அவரிடம் இருந்து நான் விலக விரும்புகிறேன். ஆனால் ஒரு குழந்தை பிறந்துவிட்டது. அதன் எதிர்காலம் கருதி என்னால் எந்த எதிர் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லைஎன்கிறாள்.
25 வயதில் திருமணமாகி 28 வயதில் தாயானதால் 30 வயதோடு வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று முற்றுப்புள்ளி வைத்துவிட முடியுமா? ஒரு குழந்தைக்கு தாயானதால் அதோடு அந்தப் பெண்ணின் வாழ்க்கையே முடிந்துவிடுமா? தாய்மை வாழ்க்கையின் முடிவா?
ஒரே வாழ்க்கையை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ரோஜாவும் இருக்கிறது. அதில் முள்ளும் இருக்கிறது. ஒருவர் ரோஜாவில் முள் இருக்கிறதேஎன்று அந்த முள்ளையே நினைத்து வருந்தலாம். இன்னொருவரோ முள்ளில் ரோஜா இருக்கிறதேஎன்று ரோஜாவை ரசித்து மகிழவும் செய்யலாம்! முள்ளும் இருக்கிறது. மலரும் இருக்கிறது இரண்டிற்கும் இடையில்தான் வாழ்க்கை இனிக்கிறது.!
விலகல் என்பது பந்தத்திற்கு மட்டுமல்ல பருவத்திற்கும் பொருந்தும் உடலுக்கும் பொருந்தும் உடலில் இருந்து உயிர் விலகிச் செல்ல விரும்பும் போது ஏற்படும் மரணத்திற்கும் பொருந்தும்.மரணத்தை ஒவ்வொரு மனிதனும் தன் உடல் மூலம்தான் நினைத்துப் பார்க்கிறான்.
உலகமே மனித உடலைச் சுற்றித்தான் இயங்குகிறது. பிறந்த போது 3 கிலோ. இன்று 60. 70 கிலோவாக வளர்ந்திருக்கிறோம். இத்தனை கிலோவாக இந்த உடலை வளர்க்கத்தான் எத்தனை மெனக்கெட்டிருக்கிறோம். உச்சி முதல் உள்ளங்கால் வரை எவ்வளவு கவனம் செலுத்துகிறோம். இந்த உடலுக்காகத்தான் தூங்கினோம். இந்த உடலுக்காகத்தான் விழித்தோம். விலை உயர்ந்த சோப் தேய்த்துக் குளித்து கமகமக்கும் பவுடர் பூசி, முகத்திற்கு மட்டும் ஐஸ் கியூப் ஒத்தடம் கொடுத்து ஆளையே அசத்தும் சென்ட் அடித்து பளிச்சென்று பகட்டாய் உடை அணிவித்து.! அடடே அத்தனையும் இந்த உடலுக்காகத்தானே!
உடலை பராமரிக்க பணம் வேண்டும். அதற்காக வேலை பார்த்தோம். உடலை குஷிப்படுத்த கோடை வாசஸ்தலங்களுக்கெல்லாம் பயணப்பட்டோம். ருசியாக நிறைய சாப்பிட வேண்டும் என்பதற்காக எத்தனை ஹோட்டல்களில் ஏறி இறங்கி சாப்பிட்டிருக்கிறோம். உடலுக்கு நோய் என்று எத்தனை டாக்டர்களைப் பார்த்து ஆலோசனை பெற்றோம். தலையில் ஒரு நரை. முகத்தில் ஒரு கருப்பு புள்ளி. சர்மத்தில் லேசான சுருக்கம் எத்தனை கவலை அடைந்தோம். எவ்வளவு பணத்தை இறைத்தோம்!
வயதுக்கு வந்து உடலில் பருவம் ஏறி அமர்ந்த போது எத்தனை கர்வப்பட்டோம். குழந்தையாக இருந்த போது சுவை தெரியாத முத்தம் நிறைய கிடைத்தது. சுவை தெரிந்த பின்பு திருமணமாகும் வரை அதற்காக ஏக்கத்தோடு காத்திருக்க வேண்டியிருந்தது. கல்யாணத்திற்கு ஜோடி தேடிய போதுகூட அம்மா இவன் உயரத்திற்கும், உடல் அமைப்பிற்கும் பொருத்தமான பெண் வேண்டும் என்று அளவு எல்லாம் பார்த்தானே! எவ்வளவு முக்கியத்துவம் இந்த உடலுக்கு!
எல்லா செல்வத்தையும் காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரி கொடுப்பதில்லை. பலருக்கு ஓரவஞ்சனை செய்கிறது. ஆனால் எல்லா பருவ வாழ்க்கையையும் எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பிறப்பு முதல் முதுமை வரை எல்லோருக்கும் எல்லா வருவத்தையும் காலம் அள்ளிக் கொடுக்கிறது. அதை வைத்து அனுபவிக்கிறார்களா? அல்லது அல்லல்படுகிறார்களா என்பது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.
posted by : abu safiyah

யதார்த்த மயக்கம்!





படுப்பதுவோ...
போர்த்துவதுவோ...
கண்ணடைப்பதுவோ
அல்ல உறக்கம்,

நடந்ததுவும்...
நடப்பதுவும்...
நடக்க இருப்பதுவும்- என
நர்த்தனமாடும் மனச்
சலனங்கள் ஓய்வதே...
உறக்கம்!

திறந்த கண்களும்...
பரந்த பார்வையும்...
உரத்த நோக்கும்
அல்ல விழிப்பு,

பிறர் வலி உணர்தலும்...
உணர்ந்து நீக்கலும்...
நீக்கி இருத்தலுமே
விழிப்பு!

காண்பதும்...
கேட்பதும்...
நுகர்தலும்...
மூச்சிழுத்து விடுவதும்
அல்ல வாழ்க்கை

நினைப்பதும்...
செய்வதும்...
செய்ததை உலகம்
நினைத்திருக்கச் செய்வதுமே
வாழ்க்கை!

உயிர் கழிதலும்...
உணர்வழிதலும்...
மெய் வீழ்தலும்...
அல்ல மரணம்,

உயிர்களுக்கு உதவாமல்...
இல்லாமலிருத்தல்போல்...
இருப்பதே...
மரணம்!

தெரியாதவை தெரிதலும்...
புரியாதவை புரிதலும்...
விளங்காதவை விளங்கலும்...
அல்ல ஞானம்,

தெரிந்ததை தெரிவித்தலும்...
புரிந்ததை புரியவைத்தலும்.
விளங்கியதை விளக்குவதுமே...
ஞானம்!

மயக்கம் தெளி,
யதார்த்தம் அறி!

-
சபீர்


விடாதே பிடி!






தலைநோன்பு பிடித்தவொரு
கலையாத நினைவு ...
பின்னிரவில் விழித்து
பிடித்துவிடத் தயாராகி
உண்டு காத்திருந்தும்
உறங்கும்வரை வருமென்ற
உருவநோன்பு வரவேயில்லை!


மண்பானைத் தண்ணீரும்
முதல்நாள் தலைநோன்பும்
ஒன்றுக்கொன்று ஒவ்வா
ஒத்துவராத் தேட்டங்கள்!

வீம்பு பிடித்தேனும்
நோன்பு பிடித்தோம்
அன்னை தடுத்தார்
சொன்னதைக் கேளோம்!

சஹரில் விழித்து பின்
லுஹரில்தான் விழித்தோம்
இடைப்பட்ட நேரம்வரை
பசிதாகம் பொறுத்தோம்!

உச்சி  வெயில்வேளை
ஊருணியில் குளித்தோம்
குளித்த தண்ணீரைக்
குடல்முட்டக் குடித்தோம்

அச்சுவெல்லப் பாச்சோறும்
பச்சரிசிப் பிடிமாவும்
இளநீரின் வழுக்கையும்
இறால் பதித்த வாடாவும்
நோன்புக் கஞ்சி மல்லாவும்
நன்னாரி சர்பத்தும்
முன்னாலே இருக்கும்
தலைநோன்பு திறக்கவென!

படைத்தவன் பெரியவன்
எனும் பாங்கின்
அழைப்போசை கேட்குமுன்
அமுதமாய்க் காதில்விழும்
அடிக்கும் நகராவோசை!

மஃரிபுக்குப் பிறகு அரை
மயக்கத்திலே கிடக்கையில்
மண்டைக்குள்ளே கேள்வி
நோன்பு
பிடித்தேனா விட்டேனா?!

- சபீர்


சனி, 30 ஜூலை, 2011

தராவிஹ் 20 ரக்அத்கள்



ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு 
பைஹகி 2-499, ஷரஹுன்னியாயா 1-104


உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அன்னவர்கள் காலத்தில் மக்கள் 23 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர்.

யஸீத் இப்னு ரூமான் 
முஅத்தா, பைஹகி 1-496, ஷரஹுன்னியாயா 1-104



ஹஸ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் மக்கள் (சஹாபாக்கள்) 20 ரகஅத்துக்கள் தொழுபவர்களாக இருந்துள்ளனர். 

சாயிப் இப்னு யஸீத் 
ஸுனன் பைஹகி , பத்ஹுல் பாரி , 5 - 157, ஐனி (புகாரி விரிவுரை) 11 - 127 



அமீருல் முஹ்மினீன் ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழுவிக்கும் படி பணித்தார்கள். வித்ரை ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள்.

அப்துர் ரஹ்மான் சலமி 
சுனன் பைஹகி 



கலீபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) , கலீபா உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு), கலீபா அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோரின் காலத்தில் தராவிஹ் 20 ரகஅத்துக்களே நடைமுறையிலிருந்து இமாம் ஷாபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) மக்காவில் தராவிஹ் இருபது ரகஅத் நடைமுறையிலிருப்பதை நான் கண்டேன் என்றும் கூறியுள்ளார்கள். 

ஜாமிஉத் திர்மிதி


ரமலான். vellimeadai.blogspot.com




شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون(185)

இன்னும் சில நாட்களில் ரமலான் வர இருக்கிறது.
ஷஃபான் தாமதமாக துவங்கியதால் 1 ம் தேதி தான்  சந்தேகத்திற்குரிய நாள். அன்றைய தினம் நோன்பு கூடாது.
1 ம்தேதி இரவு பிறை தென்பட்டால் 2 ம் தேதி முதல் நோன்பு. இல்லை எனில் 3ம் தேதி முதல் ரமலான் நோன்பு ஆரம்பமாகும்.

அல்லாஹ் நமக்கு ஷஃபான் மாத்தின் 29 நாளில் ரமலான் பிறையை காட்டினால் அடுத்த நாள் நோன்பு. இல்லை எனில் அதற்கடுத்த நாளிலிருந்து ரமலான் ஆரம்பமாகும். நபிகள நாயகம் (ஸல்) அவர்களது வழிகாட்டுதலிலும் சஹாபாக்களின் வழி முறைகளிலும் தெளிவாக அறியப்பட்ட நடைமுறையை நாம் பின்பற்றி வருகிறோம்.

சவூதி என்று சொல்லி, சர்வதேச பிறை என்று சொல்லி குழப்பும் தீய சக்திகளை புறக்கணிப்பீர்! இஸ்லாத்தின் எதார்த்த்திற்கும் எளிமைக்கும் எதிரான கூற்று அது. இஸ்லாத்தினோடு தொடர்பில்லாத பேச்சு அது. மார்க்கத்தை விளையாட்டுப் பொருளாகவும் விவாத களமாகவும் எடுத்துக் கொண்டு விட்ட சிலர் ரமலானின் பிறையிலிருந்து தஙகளது பித்தலாட்ட்த்தை ஆரம்பித்து விடுவர். சமுதாயம் அந்த குறும்புக்கார்ர்களை அடையாளம் கண்டு விலகி இருக்க வேண்டும்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ -  البخاري – 1907

عَنْ كُرَيْبٍ أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا وَاسْتُهِلَّ عَلَيَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ فَرَأَيْتُ الْهِلَالَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ثُمَّ ذَكَرَ الْهِلَالَ فَقَالَ مَتَى رَأَيْتُمْ الْهِلَالَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ فَقَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلَا نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلَاثِينَ أَوْ نَرَاهُ فَقُلْتُ أَوَ لَا تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ فَقَالَ لَا هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَكَّ يَحْيَى بْنُ يَحْيَى فِي نَكْتَفِي أَوْ تَكْتَفِي-  مسلم 1819


ரமலானின் சிறப்பு

குறைவான வார்த்தைகளை பேசும் பழக்க முடைய பெருமானார்(ஸல்) ரமலானின் சிறப்பை வழக்கத்திற்கு மாறாக மிக் நீண்ட வார்த்தைகளில் எடுத்துக் கூறினார்கள்.

عن سلمان الفارسي قال   خطبنا رسول الله   صلى الله عليه وسلم   آخر يوم من شعبان فقال يا أيها الناس انه قد أظلكم شهر عظيم شهر مبارك فيه ليلة خير من ألف شهر فرض الله صيامه وجعل قيام ليله تطوعا فمن تطوع فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى سبعين فريضة وهو شهر الصبر والصبر ثوابه الجنة وهو شهر المواساة وهو شهر يزاد رزق المؤمن فيه من فطر صائما كان له عتق رقبة ومغفرة لذنوبه قيل يا رسول الله ليس كلنا يجد ما يفطر الصائم قال يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة ماء ومن اشبع صائما كان له مغفرة لذنوبه وسقاه الله من حوضي شربة لا يظمأ حتى يدخل الجنة وكان له مثل أجره من غير أن ينقص من أجره شيئا وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار ومن خفف عن مملوكه فيه أعتقه الله من النار قلت ويأتي حديث في فضل الصوم في صوم التطوع

சமுதாயம் அதற்கு தகுந்த ஆர்வத்தை காட்ட வேண்டும்.

ஒரு ரமலானை பெற்றுக்கொள்வது வாழ்வின் மிகப்பெரிய பேறு.

عن طلحة بن عبيد الله أن رجلين قدما على رسول الله صلى الله عليه وسلم وكان إسلامهما جميعا وكان أحدهما أشد اجتهادا من صاحبه فغزا المجتهد منهما فاستشهد ثم مكث الآخر بعده سنة ثم توفي قال طلحة فرأيت فيما يرى النائم كأني عند باب الجنة إذا أنا بهما وقد خرج خارج من الجنة فأذن للذي توفي الآخر منهما ثم خرج فأذن للذي استشهد ثم رجعا إلي فقالا لي ارجع فإنه لم يأن لك بعد فأصبح طلحة يحدث به الناس فعجبوا لذلك فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال من أي ذلك تعجبون قالوا يا رسول الله هذا كان أشد اجتهادا ثم استشهد في سبيل الله ودخل هذا الجنة قبله فقال أليس قد مكث هذا بعده سنة قالوا بلى وأدرك رمضان فصامه قالوا بلى وصلى كذا وكذا سجدة في السنة قالوا بلى قال رسول الله فلما بينهما أبعد ما بين السماء والأرض  - احمد

ஷஹீதை விட ரமலானை பெற்றுக் கொண்டவர் அதிக மரியாதைக்குரிய்வர் ஆகிறார்.

கவனிக்க வேண்டும்:
ரமலான் வந்து போவது ரமலானை பெற்றுக் கொண்டதாகாது.

ரமலானை பெற்றுக் கொள்ளும் வழி

ரமலானை இதய சுத்தியோடும் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்பது, அதற்காக தயாராவது,
·         பெருமானாரின் அக்கறை -ரஜபிலேயே துஆ
இரண்டு மாத்த்திற்கு முன்பே ரமலானைப் பற்றி   
சிந்திக்கவும் அதற்காக தயாராகுமாறு தூண்டு கிறது.
·         ரஜப் ஷஃபானில் பெருமானார் (ஸல்) அதிகமாக நோன்பு வைப்பார்கள்,

வாழ்நாளின் ஒரு பொன்னான நேரத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கூடுமான நன்மைகளை செய்ய முயற்சிக்க வேண்டும். குறைந்த பட்ச்ம் தவறுகளை தவிர்க்க வேண்டும்.

عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردة الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة -  
                                                            
நோன்பு ரம்லானின் பிரதான கடமை
சமுதாயம் இதில் சளைக்காத ஆர்வத்தை காட்டுகிறது. சிறு பிள்ளைகள் முதல் பெரியோர் பெண்களவரை அனைத்து தரப்பாரும் விருப்பத்தோடு இந்த விரத்த்தை மேற்கொள்கின்றனர்

ஒரு சிறு பையன் நோன்பு வைத்தான், அவனது பட்டினியை அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மதியம் நேரத்தில் பையனிடம் சொன்னார். தம்பி சாப்பிடு! இப்போது சாப்பிட்டால் அது இன்னொரு சஹராகிவிடும். உனக்கு இரண்டு நோன்பு கிடைக்கும் என்றார். பையன் மறுத்து விட்டான். எல்லோரும் சாப்பிடும் போதுதான் நானும் சாப்பிடுவேன் என்றான்.

மாற்று மத சகோதர்ர்களை ஆச்சரியப் படுத்தக் கூடியது இஸ்லாமிய நோன்பு.

முஃமின்களது காலில் ஒரு முள் தைத்தால் கூட அதற்கு தனியான நன்மைகளை வழங்குகிற இறைவன் ஒரு பகல் முழுக்க அடியான் பட்டினி கிடக்க, தாகத்தை பொறுத்துக் கொள்ள எவ்வளவு கருணை மழை பொழிவான்?

குழந்தை பள்ளிக்கூட்த்திலிருந்து திரும்பியதும் தாய் எவ்வளவு அக்கறையாக கருணையோடு குழந்தைக்கு சோறூட்டுகிறார். அல்லாஹ்வின் கருணை அதைவிடப் பெரிதல்லவா?

அதனால் தான் நோன்புக்கு நானே கூலி கொடுக்கிறேன் என்கிறான்.

ஒரு சிலர் முதல் மூன்று நோன்பு கடைசி மூன்று நோன்பு என்று ஷார்ட்கட் பயன்படுத்துகின்றனர், தவறு. தள்ளாத முதியோர், கர்ப்பிணிகள் பால் கொடுக்கும் பெண்கள், நோயாளிகளை தவிர மற்ற அனைவரின் மீதும் நோன்பு கட்டாயக் கடமை என்பதை மறக்க கூடாது.

தொழுகை
அனைத்து தொழுகைக்களிலும் விஷேச கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக தராவீஹ் மற்றும் தஹஜ்ஜது தொழுகைகள்

தராவீஹ் 20 ரக அத்துக்களே!
நீங்கள் தராவீஹ் தொழ நினைத்தால் ஜமாத்துடன் 20 ரக அத் தொழுங்கள். அது தான் மார்க்கம்.

وعن ابن شهاب عن عروة بن الزبير عن عبد الرحمن بن عبد القاري أنه قال خرجت مع عمر بن الخطاب رضي الله عنه ليلة في رمضان إلى المسجد فإذا الناس أوزاع متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرهط فقال عمر إني أرى لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل ثم عزم فجمعهم على أبي بن كعب ثم خرجت معه ليلة أخرى والناس يصلون بصلاة قارئهم قال عمر نعم البدعة هذه والتي ينامون عنها أفضل من التي يقومون يريد آخر الليل وكان الناس يقومون أوله 

உமர் (ரலி) ஏற்படுத்திய சுன்னத் இது என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

அப்போதிலிருந்து இப்போதுவரை மஸ்ஜிதுல் ஹரமிலும், மஸ்ஜிதுன்னபவியிலும் இருபது ரகாத்துகளே தொழப்பட்டு வருகின்றன. மக்கா மதினாவின் வர்லாறு. இப்போது போல 24 மணிநேரமும் வீடியோவில் பதிவு செய்யப் பட்டிருக்கவில்லை என்றாலும் அதற்கு குறையாத வகையில் கவனமாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலுமுள்ள பாரம்பரிய பள்ளிவாசல்களின் நடைமுறையும் இவ்வாறே அமைந்துள்ளது.

8, 11, என்ற எண்ணிக்கையில் சொல்லப்படும் ஹதீஸ்கள்  பெருமானாரின் தஹஜ்ஜத் தொழுகையே குறிக்கிறது. ரமலானின் விஷேச இரவுத்தொழுகையை அல்ல.

இது விசயத்தில் தீர யோசிக்காமல் அவசர முடிவுக்கு வந்துதராவீஹ் விசயத்தில் ஏமாற்றத்திற்கு ஆளாகாதீர்கள்.

ஆரம்பத்தில் தராவீஹ் 8 ரக அத் என்று பேசியவர்கள் பின்னர் இரவுத்தொழுகை 8 ரக அத் என்று மாற்றிக் கொண்ட்தையும், அந்த தொழுகையை கூட ரமலானின் பிறபகுதியில் இரவு 12 மணிக்குமேல் தொழுவதையும் கவனியுங்கள்.

தராவீஹுக்கும் தஹஜ்ஜத் தொழுகைகும் வித்தியாசம் தெரியாமல் குழப்பிக் கொண்டு தீனை கோமாளித்தனமாக்கும் இவர்களது நடைமுறைகளை உதறித்தள்ளுங்கள்.   

தஹஜ்ஜுத்

தனித்துவம் மிக்க தஹஜ்ஜத் தொழுகைக்கு ரமலான் ஒரு நல்ல வாய்ப்பாகும். சஹருக்கு சற்று நேரம் முன்னதாக எழுந்திருத்தால் போதுமானது.
குறைந்த பட்சம் 8 அதிக பட்சமாக 12 ரக அத் தஹஜ்ஜுத் தொழுலாம்.

டிவி

சஹர் நேரத்தில் டி வி பார்க்கிற பழக்கத்தை விட்டுவிட்டால் தஹஜ்ஜத் தொழுகை இலேசாகி விடும்.

என்னதான் சிறந்த பயான் என்றாலும் திட்டவட்டமாக் முடிவெடுத்து சஹர் நேரத்தில் டி வி யை ஆப் செய்துவிட்டு சஹர் செய்து பாருங்கள். அமைதியான சஹரை அனுபவிப்பீர்கள். தஹஜ்ஜுத் தொழுவும் குர் ஆன் ஓதவும் போதிய நேரம் கிடைக்கும்.

குர் ஆன்  
ரமலானின் சிறப்பே குர் ஆன் தான். அதிமாக குரான் ஓத வேண்டும்.
பெருமானாருக்கு ஜிப்ரயீல் (அலை) ஒரு முறை குர் ஆனை ஓதிக்காட்டுவார்.

இமாம் அபூஹனீபா ஒரு ரமாலானில் 63 முறை குரான் ஒதும் பழக்கம் கொண்டிருந்தார். பகலில் ஒன்று இரவில் ஒன்று. ஒரு மாத தராவீஹில் 3 குர் ஆன்.

இந்த ரமலானுக்கு என ஒரு குறிப்பிட்ட செயலை திட்டமிட்டுக் கொண்டால் ரமலானை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

குர் ஆன் ஓதப்பழகுவது, அல்லது பெருமானாரின் வரலாற்றை படிப்பது, கலீபாக்கள் சஹாபாக்களின் வரலாற்றை படிப்பது, அல்லது ஹதீஸ் நூல் ஒன்றை படித்து முடித்துவிடுவது என்று ஒரு திட்ட்த்தை வகுத்துக் கொண்டால் ஒரு ரமலான் எப்படி கழிந்த்து என்பதை பல வருடங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ள முடியும். இவை ரமலானை அர்த்தப் படுத்திக் கொள்ளும் முயற்சியாக அமையும்.

தர்மம்
ரமலானில் பெருமானார் (ஸல்) அவர்கள் வீசும் காற்றை விட அதிகமாக தர்மம் செய்வார்கள்.

ஒரு அற்புதமான வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இயன்ற வழிகளிலெல்லாம் அதை பயன்படுத்திக் கொளுவது புத்திசாலித்தனம்.

عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه-  نسائي

عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عند كل فطر عتقاء وذلك في كل ليلة -  ابن ماجة